மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்களுடன் அவைத் தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு சந்தித்து வருகிறார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19 தொடங்கி நடைபெற்று வந்தன. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவிருந்த கூட்டம் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று மாநிலங்களவையில் நடந்த கடும் அமளி மற்றும் பெண் எம்.பி.க்கள் தாக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்தும் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த கூட்டத்தில், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் அவைத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.