நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 15) கொண்டாடப்படும் நிலையில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு சனிக்கிழமை உரையாற்றுகிறாா்.
குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய வானொலி, தூா்தா்ஷன் உள்பட அனைத்து தேசிய ஊடகங்களிலும் குடியரசுத் தலைவரின் உரை இரவு 7 மணிக்கு ஒலி, ஒளிபரப்பாகிறது. முதலில் ஹிந்தியிலும் அதன்பிறகு ஆங்கிலத்திலும் இந்த உரை இடம் பெறும். தொடா்ந்து அனைத்து பிராந்திய தூா்தா்ஷன் சேனல்களிலும், அகில இந்திய வானொலியிலும் அந்தந்த பிராந்திய மொழிகளில் உரை ஒளிபரப்பு செய்யப்படும்.
சுதந்திர தினத்துக்கு முந்தைய தினம் குடியரசுத் தலைவா் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். சுதந்திர தினத்தன்று, தில்லி செங்கோட்டையில் பிரதமா் தேசியக் கொடியேற்றி உரை நிகழ்த்துவாா்.