தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 50 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தொற்றால் யாரும் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையன்று உயிரிழக்கவில்லை. கரோனா இரண்டாவது அலையில் தொடக்கத்தில் இருந்து உயிரிழப்பு இல்லாமல் ஒன்பதாவது முறையாக பதிவாகி உள்ளது.
இதனிடையே, தில்லியில் இதுவரை 1.33 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 83,000 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 31.51 லட்சம் பேருக்கு இரண்டு தவணையும் செலுத்தப்பட்டுள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.
தற்போது தில்லி அரசின் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் ஏழு நாள்களுக்கு வரும் என்றும் அரசு கூறியுள்ளது.