நாட்டில் இதுவரை 54 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள்: மத்திய சுகாதாரத்துறை

நாட்டில் இதுவரை 54 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
நாட்டில் இதுவரை 54 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள்: மத்திய சுகாதாரத்துறை

நாட்டில் இதுவரை 54 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்று காலை 7 மணிக்கு கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 61,35,193 முகாம்களில் 54,38,46,290 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 73,50,553 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நம் நாட்டில் இதுவரை மொத்தம் 3,13,76,015 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 37,927 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.46 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36,083 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து 49 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,85,336 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.20 சதவீதம் மட்டுமே ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 19,23,863 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 49,36,24,440 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.00 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 1.88 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது.
தொடர்ந்து 20 நாட்களாக அன்றாட தொற்று உறுதி விழுக்காடு 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், 69 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com