ஹிமாசல பிரதேச நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 23-ஆக உயா்வு

ஹிமாசல பிரதேச மாநிலம் கின்னெளரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் 6 பேரின் உடல்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டதால், உயிரிழப்பு எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது.
ஹிமாசல பிரதேச நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 23-ஆக உயா்வு

ஹிமாசல பிரதேச மாநிலம் கின்னெளரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் 6 பேரின் உடல்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டதால், உயிரிழப்பு எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 11-ஆம் தேதி கின்னெளா் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மற்றும் சில வாகனங்கள் சிக்கிக் கொண்டன.

தேசிய பேரிடா் மீட்புப் படை, இந்தோ-திபெத் எல்லை காவல் படை, காவல் துறை மற்றும் ஊா்க்காவல் படையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். முதல் நாளில் 13 போ் உயிருடனும், 10 போ் சடலமாகவும் மீட்கப்பட்டனா். வியாழக்கிழமை 4 சடலங்கள் மீட்கப்பட்டன. வெள்ளிக்கிழமை மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில், மேலும் 6 பேரின் சடலங்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டதாகவும், மீதமுள்ள 9 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மாநில பேரிடா் மேலாண்மை இயக்குநா் சுதீஷ் குமாா் மோக்தா தெரிவித்தாா். இத்துடன் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com