கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வீடுவீடாகச் சென்று கரோனா பரிசோதனை செய்யும் பணி தொடங்கியுள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பெங்களூரு பெருநகராட்சி சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீடு வீடாகச் சென்று மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும் வகையில், டாக்டர்ஸ் யுவர்ஸ் டோர்ஸ்டெப் என்ற பெயரில் மருத்துவக் குழு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெங்களூருவில் உள்ள 54 வார்டுகளிலும் வீடுவீடாகச் சென்று கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
ஒவ்வொரு குழுவும் ஒரு நாளைக்கு குறைந்தது 50 வீடுகளுக்குச் சென்று கரோனா பரிசோதனை செய்து முடிவுகளை அறிவித்து வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு மருத்துவர், ஒரு முதலுதவி அளிப்பவர் இருப்பர்.