மூன்று நாள் பயணமாக வயநாடு வந்துள்ள ராகுல் காந்தி இன்று மானந்தவாடி பகுதியில் சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக தனது நாடாளுமன்றத் தொகுதியான வயநாடு வந்துள்ளார். வயநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்குகொள்ளவிருக்கிறார்.
இன்று காலை மானந்தவாடி பூங்காவில் மகாத்மா காந்தி சிலையைத் திறந்துவைத்த பின்னர் மானந்தவாடியில் சட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வில்(Common Law Admission Test) வெற்றி பெற்ற மாணவிகளுடன் மதிய உணவு அருந்தினார். மேலும் அவர்களின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
இதையும் படிக்க | வயநாட்டில் மகாத்மா காந்தி சிலையைத் திறந்துவைத்தார் ராகுல் காந்தி