உத்தரகண்டில் ஆகஸ்ட் 24 வரை ஊரடங்கு நீட்டிப்பு

​உத்தரகண்டில் அமலில் உள்ள ஊரடங்கு ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


உத்தரகண்டில் அமலில் உள்ள ஊரடங்கு ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அரசு உத்தரவில், "கரோனா ஊரடங்கு ஆகஸ்ட் 17 காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 24 காலை 6 மணி வரை அமலில் இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெறவுள்ளன. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத் தரவுகளின்படி உத்தரகண்டில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்னும் 380 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரகண்ட் அரசு தரவுகளின்படி மாநிலத்தில் இதுவரை 72.26 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 55.02 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com