தில்லியில் புதிதாக 36 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 66,445 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 36 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட விகிதம் 0.05 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் 76 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,132 பேருக்கு கரோனா
இதுவரை மொத்தம் 14,37,192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 14,11,688 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 25,077 பேர் பலியாகிவிட்டனர்.
427 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.