இன்று ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் தினம் இன்று(ஆகஸ்ட் 22) நாடு முழுவதும் கொண்டப்படுகிறது. தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாநிலங்களைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு, தமிழில் ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
ரக்ஷா பந்தன் என்பது சகோதர, சகோதரிகளுக்கு இடையே ஆழமாக வேரூன்றிய அன்பு மற்றும் மரியாதையின் வெளிப்பாடு.
பெண்களின் பெருமையை நிலைநாட்டவும், பாதுகாப்பான சூழலை எப்போதும் உறுதி செய்யவும் சபதம் ஏற்போம் என குறிப்பிட்டுள்ளார்.
மராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளிலும் அந்தந்த மாநில மக்களுக்கு வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.