உத்தரகண்ட் சட்டப்பேரவையில் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது.
இன்று முதல் ஆகஸ்ட் 27 வரை பேரவையானது நடைபெறவுள்ளது. முதல்வராக கடந்த மாதம் புஷ்கர் சிங் தாமி பதவியேற்ற பிறகு கூடும் முதல் சட்டப்பேரவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக 71 உறுப்பினர்களை இரு குழுக்களாக பிரித்து 40 பேர் பேரவையிலும், 31 பேர் அறை எண் 107-ல் அமர வைக்கப்பட்டுள்ளனர்.