மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது மம்தா பேசியது:
மேற்கு வங்கத்தில் கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. மக்கள் வாக்களித்து பேரவை உறுப்பினர்களை தேர்வு செய்கின்றனர். ஆகையால், மக்களின் ஜனநாயக உரிமையை பறிக்காமல், இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.
இதையும் படிக்க | தலிபான்களுக்கு எதிராகக் குரலெழுப்பும் உலகம்: ஆப்கனில் நடப்பதென்ன?
மேலும், ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெறவுள்ள ஆப்கனின் தற்போதைய நிலையை எடுத்துரைக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் பங்கேற்கும் எனத் தெரிவித்தார்.