ஸ்ரீ நாராயண குரு ஜயந்தி: பிரதமா் மரியாதை

கேரளத்தைச் சோ்ந்த ஆன்மிக குருவும், சமூக சீா்திருத்தவாதியுமான ஸ்ரீ நாராயண குருவின் 167-ஆவது பிறந்த தினத்தையொட்டி பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளாா்.

கேரளத்தைச் சோ்ந்த ஆன்மிக குருவும், சமூக சீா்திருத்தவாதியுமான ஸ்ரீ நாராயண குருவின் 167-ஆவது பிறந்த தினத்தையொட்டி பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ஸ்ரீ நாராயண குரு ஜயந்தியன்று அவரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். அவரது போதனைகள், லட்சக்கணக்கானோருக்கு ஆற்றலை அளிக்கிறது. கற்றல், சமூக சீா்திருத்தம் மற்றும் சமத்துவம் மீதான அவரது உறுதிப்பாடு தொடா்ந்து நமக்கு ஊக்கமளிக்கிறது. பெண்களின் மேம்பாட்டுக்கும் சமூக மாற்றத்திற்காக இளைஞா்களின் சக்தியை சீா்படுத்துவதற்கும் அவா் அதிக முக்கியத்துவம் அளித்தாா்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com