மேற்கு வங்க வன்முறை: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ; 9 வழக்குகள் பதிவு

மேற்கு வங்க தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணையைத் தொடங்கி இதுவரை 9 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மேற்கு வங்க தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணையைத் தொடங்கி இதுவரை 9 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

மேலும் வன்முறை வெடித்த இடங்களிலும் சிபிஐ நேரடியாகச் சென்று விசாரணை நடத்தியுள்ளது.

முன்னதாக, மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த கொலை, பாலியல் வன்கொடுமை, வன்முறை தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி அந்த மாநில உயர் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

மேலும் தேர்தலுக்குப் பிறகு நடந்த அனைத்து குற்றச் சம்பவங்கள் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com