காஷ்மீரில் மத்திய காவல்துறையினர் முகாமில் குண்டு வெடித்த வழக்கில் தீவிரவாதிகளுடன் தொடர்பிலிருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டியிருக்கிறார்கள்.
லாங்கேட் பகுதியில் கடந்த ஆக-16 ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் அதில் தொடர்புடைய மூவரை காவல்துறையினர் தேடுதல் வேட்டையின் மூலம் கைது செய்தனர்.
இதையும் படிக்க | பினராயி விஜயனின் 2.0 அரசின் 100 நாள்கள்: கொண்டாட ஒன்றுமில்லை
கைது செய்யப்பட்ட அகமது தார் , ஜாம்செட் கான் , ஜாவித் அகமது கான் ஆகியோர் குண்டு வெடிப்பை நிகழ்த்தியதோடு லக்சர் ஈ தொய்பா அமைப்புடன் தொடர்பில் இருந்ததையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
இம்மூவர் மீதும் ஐபிசி பிரிவு 307 மற்றும் சக்திவாய்ந்த வெடிபொருளை வைத்திருந்ததிற்காக சட்டம் 3/4 கீழும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார்கள்.
அவர்களிடமிருந்து சில துப்பாக்கிகளும் , வெடி பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.