இந்தியாவில் கரோனா தொற்று கட்டுக்குள் இருக்கும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதனுடன் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்னிக்கை 341 ஆகும். தினசரி தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் சதவீதம் 0.01 ஆகவும் நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் சதவீதம் 98.6 ஆகவும் இருக்கிறது.
இதையும் படிக்க | அரவிந்த் கேஜரிவாலுடன் கைக்கோர்த்த பிரபல நடிகர்
மேலும் இதுவரை 6.68 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7.41 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நோய் கட்டுப்பாடுகள் குறித்து பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் 'பாதுகாப்பு நடவடிக்கைகளால் கரோனா தொற்று குறைந்து வந்தாலும் பொதுமக்கள் தொடர்ந்து முகக்கவசங்களை அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் ' எனத் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக மாநிலத்தில் 18 மாவட்டங்கள் கரோனா இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.