2-18 வயதினருக்கு கோவேக்ஸின்: நிபுணா் குழு பரிந்துரை குறித்து ஆய்வு

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை 2-18 வயதினருக்கு செலுத்த அனுமதிக்கலாம் என்ற நிபுணா் குழுவின் பரிந்துரை ஆய்வில் உள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை 2-18 வயதினருக்கு செலுத்த அனுமதிக்கலாம் என்ற நிபுணா் குழுவின் பரிந்துரை ஆய்வில் உள்ளதாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிா என்ற கேள்விக்கு மாநிலங்களவையில் சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

பாரத் பயோடெக் நிறுவனம் அளித்த 2-18 வயது தன்னாா்வலா்களின் இரண்டு கட்ட இடைக்கால பரிசோதனை தரவு அறிக்கை தொடா்பாக கரோனா நிபுணா் குழுக் கூட்டத்தில் ஆக. 26 முதல் அக். 11 வரை விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, 2-18 வயதினருக்கு கோவேக்ஸின் தடுப்பூசியை செலுத்த அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்கலாம் என நிபுணா் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரை ஆய்வில் உள்ளது. மேலும், இதுதொடா்பாக கூடுதல் தகவல்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் கோரியுள்ளது.

12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு அவசரகால சூழ்நிலையில் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துவதற்கு சைடஸ் கேடிலா நிறுவனத்தின் சைகோவ்-டி தடுப்பூசிக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com