எல்லைப் பாதுகாப்புப் படையின் அமைப்பு தினத்தை முன்னிட்டு வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 1965ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி இந்திய எல்லைகளை பாதுகாப்பதற்காக எல்லைப் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. இன்று 57ஆவது அமைப்பு தினத்தை நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றது.
இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,
“எல்லைப் பாதுகாப்புப் படை அமைப்பு நாளையொட்டி, எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நல்வாழ்த்துகள். எல்லைப் பாதுகாப்புப் படை அதன் தைரியம் மற்றும் தொழில்முறைக்காக பரவலாக மதிக்கப்படுகிறது.
இயற்கைப் பேரிடர்கள் மற்றும் நெருக்கடியான தருணங்களின் போது, நமது குடிமக்களைப் பாதுகாப்பதில் எல்லைப் பாதுகாப்புப் படை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.!”