நாட்டில் விவசாயிகளின் வருவாய் சீராக அதிகரித்து வருகிறது என்று மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக வெள்ளிக்கிழமை அளித்த பதில்:
விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடன் புதிய கொள்கைகள் மற்றும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
மாநில அரசுகளின் பங்களிப்புடன் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் திட்டம் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்கான கொள்கைகள், திட்டங்களுக்கு அதிக அளவிலான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் இதர நிதி வளங்கள் உதவிகரமாக உள்ளன.
இதன் மூலம் நாட்டில் விவசாயிகளின் வருவாய் சீராக அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தாா்.