திருப்பதி அருகே கார் விபத்தில் 6 பேர் பலி

திருப்பதி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்ததில் குழந்தை உட்பட 6 பேர் பலியாகினர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருப்பதி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்ததில் குழந்தை உட்பட 6 பேர் பலியாகினர். 

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் காரில் இன்று திருப்பதி கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தனர். இவர்களுடையே கார், ஐத்தேப்பள்ளி அருகே வந்துகொண்டிருந்தபோது சாலையின் தடுப்புச் சுவரில் திடீரென மோதியது. 

இதில் கார் மோதிய வேகத்தில் தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

ஆனால் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com