புது தில்லி: நாட்டில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புத்தாக 6,822 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 558 நாள்களுக்குப் பிறகு பதிவாகும் மிகக் குறைந்த பாதிப்பாகும்.
கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நாட்டிலேயே அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 3,277 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 95,014 ஆகக் குறைந்துள்ளது. இது 554 நாள்களுக்குப் பிறகு பதிவாகும் குறைவான எண்ணிக்கையாகும்.
இதையும் படிக்கலாமே.. இதுதான் ஒமைக்ரானின் புதிய அவதாரமோ?
அதுபோல, கடந்த 24 மணி நேரத்தில் 10,004 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனாவக்கு 220 பேர் பலியாகியுள்ளனர்.
நாட்டில் இதுவரை 128.75 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.