நாட்டில் புதிதாக 8,439 பேருக்கு கரோனா

நாட்டில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 8,439 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. 
நாட்டில் புதிதாக 8,439 பேருக்கு கரோனா
நாட்டில் புதிதாக 8,439 பேருக்கு கரோனா


புது தில்லி: நாட்டில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 8,439 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. 

கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் இதுவரை 65.06 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 93,733 ஆகக் குறைந்துள்ளது. இது 555 நாள்களுக்குப் பிறகு பதிவாகும் குறைவான எண்ணிக்கையாகும்.

அதுபோல, கடந்த 24 மணி நேரத்தில் 9,525 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனாவுக்கு 195 பேர் பலியானதையடுத்து மொத்தம் எண்ணிக்கை 4,73,952ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டில் இதுவரை 129.5 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com