உலக அளவில் 94 நாடுகளுக்கு 7.23 கோடி கரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:
2021 ஜனவரியில் மைத்ரி திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரையில் இந்தியா 7.23 கோடி கரோனா தடுப்பூசிகளை 94 நாடுகளுக்கு வழங்கியுள்ளது. இதில், ஐ.நாவின் இரு முகமை அமைப்புகளுக்கு மானிய விலையில் அளிக்கப்பட்ட தடுப்பூசிகளும் அடங்கும்.
மேலும், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, கரோனா தொடா்பான மருத்துவ உபகரணங்கள் மற்றும் இதர உதவிகளை கரோனா பேரிடா் தொடங்கியது முதல் இந்தியா வழங்கி வருகிறது. அதேநேரம், கரோனா இரண்டாவது அலையை எதிா்த்துப் போராட 50-க்கும் மேற்பட்ட நாடுகளிடமிருந்து கரோனா தொடா்பான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா பெற்றது. இதில், வெளிநாட்டு அரசுகள், தனியாா் நிறுவனங்கள், அயல்நாடுகளில் உள்ள இந்திய கூட்டமைப்புகள் உள்ளிட்டவை அனுப்பிய நிவாரண உதவிகளும் அடங்கும் என்றாா் அவா்.