காஷ்மீர் மாநிலத்தின் ஷோபியன் மாவட்டத்தில் இன்று காலையிலிருந்து தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது.
காஷ்மீரில் சமீப காலமாக தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்று ஷோபியன் மாவட்டத்தில் உள்ள சோலன் பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதை உறுதி செய்த காவல்துறையினர் தேடுதலில் ஈடுபட்டனர்.
பின் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதலைத் தொடர்ந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது.