காஷ்மீர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலத்தின் ஷோபியன் மாவட்டத்தில் இன்று காலை தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காஷ்மீர் மாநிலத்தின் ஷோபியன் மாவட்டத்தில் இன்று காலை தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை.

காஷ்மீரில் சமீப காலமாக தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்று ஷோபியன் மாவட்டத்தில் உள்ள சோலன் பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதை உறுதி செய்த காவல்துறையினர் தேடுதலில் ஈடுபட்டனர்.

பின் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதலைத் தொடர்ந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.

தற்போது இத்தாக்குதலில் அடையாளம் தெரியாத தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com