தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் மர்ம பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் காயமடைந்தார்.
தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு லேப்டாப் பையில் இருந்து மர்ம பொருள் ஒன்று வெடித்துள்ளது. நீதிமன்ற அலுவல்கள் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
லேசான தீ விபத்து ஏற்பட்டதால் இதில் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும், மர்ம பொருள் குறித்தும் விபத்து குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.