முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான வினோத் காம்பிளியிடம் வங்கியில் வேலை பார்ப்பவர் போல் பேசி ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்.
கடந்த டிச.3 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடது கை ஆட்டக்காரரான வினோத் காம்பிளியிடம் அவருடைய வங்கிக் கணக்கின் கேஒய்சி ஆவணத்தை ’அப்டேட்’ செய்வதாகக் கூறி வங்கி விவரங்களையும் ஏடிஎம் எண்களையும் கேட்டுத் தெரிந்து கொண்ட ஒரு நபர் ரூ.1.14 லட்சத்தை காம்பிளியின் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்து ஏமாற்றியிருக்கிறார்.
பின், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வினோத் காம்பிளி மும்பை பந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் , காவல்துறையினர் மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வருகிறார்கள்.