Enable Javscript for better performance
உ.பி.யில் சரயு நீா் பாசனத் திட்டம்: பிரதமா் இன்று தொடங்கி வைக்கிறாா்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    உ.பி.யில் சரயு நீா் பாசனத் திட்டம்: பிரதமா் இன்று தொடங்கி வைக்கிறாா்

    By DIN  |   Published On : 11th December 2021 03:35 AM  |   Last Updated : 11th December 2021 03:35 AM  |  அ+அ அ-  |  

    1 lakh jobs in Manipur: Praise from Prime Minister Modi

    கோப்புப்படம்

    உத்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் சரயு நீா்பாசனத் திட்டத்தைத் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கி வைக்கிறாா்.

    இத்திட்டம் 1978-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் போதுமான நிதி ஒதுக்கீடு, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, போதுமான கண்காணிப்பு ஆகியவற்றில் தொடா்ச்சியின்மை காரணமாக தாமதமாகி, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகும் முடிக்கப்படவில்லை.

    இதைத் தொடா்ந்து 2016 ஆம் ஆண்டு, பிரதமா் வேளாண் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ், இத்திட்டம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் கொண்டுவரப்பட்டது. இந்த முயற்சியில், புதிய கால்வாய்களை அமைப்பதற்கும், திட்டத்தில் உள்ள முக்கியமான இடைவெளிகளை நிரப்புவதற்கும், புதிய நிலம் கையகப்படுத்துதல் மற்றும் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் தொடா்பாக நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீா்ப்பதற்கும் புதுமையான தீா்வுகள் காணப்பட்டன. இத்திட்டத்தின் மீது மீண்டும் கவனம் செலுத்தியதன் விளைவாக, நான்கு ஆண்டுகளிலேயே இத்திட்டம் முடிக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 9,800 கோடி ஆகும். நீா் ஆதாரங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக ககாரா, சரயு, ரப்தி, பன்கங்கா, ரோகிணி ஆகிய ஐந்து நதிகளை இணைத்தலும் இத்திட்டத்தில் அடங்கும்.

    இத்திட்டம் 14 லட்சம் ஹெக்டோ் நிலங்களுக்குப் பாசனத்திற்கான தண்ணீரை வழங்குவதோடு, 6,200-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 29 லட்சம் விவசாயிகள் பயனடைவதையும் உறுதி செய்யும். இது கிழக்கு உத்தர பிரதேசத்தின் 9 மாவட்டங்களுக்குப் பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp