ஒமைக்ரான் கரோனா சூழலுக்கேற்ப சா்வதேச பயணிகள் விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் 23-ஆம் தேதி விதிக்கப்பட்ட வழக்கமான சா்வதேச விமான பயணிகள் சேவை, டிசம்பா் 15-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதையும் படிக்க | தமிழகத்தில் மேலும் 649 பேருக்கு கரோனா
ஆனால் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு தொடங்கியதால் சா்வதேச விமான பயணிகள் சேவைக்கு தடை விதிக்கப்பட்டு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பேசிய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சர்வதேச விமான சேவைகளை இயல்பாக்குவது ஒமைக்ரான் சூழ்நிலையைப் பொறுத்தது எனவும் இதுதொடர்பாக ஒமைக்ரான் சூழல் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், பிற நாடுகளுடனான ஒப்பந்தத்தின்படி செயல்பாட்டில் உள்ள சா்வதேச விமான சேவை தொடா்ந்து இயங்கும் என்றும் தெரிவித்தார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், கென்யா, பூடான், பிரான்ஸ் உள்பட 32 நாடுகளுக்கு மத்திய அரசு புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி விமான சேவை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.