எம்.பி.க்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று மாநிலங்களவை கூடியதிலிருந்து இடைநீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க | இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை: இந்தியாவிற்கு பாதிப்பு?
இதனைத் தொடர்ந்து எம்.பி.க்களுக்கு எச்சரிக்கை விடுத்த அவைத் தலைவர் வெங்கைய நாயுடு பிற்பகல் 2 மணிவரை அவையை ஒத்திவைத்தார்.
குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டதாக 12 எதிர்க்கட்சி எம்.பி.க்களை மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.