நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,984 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 247 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 4,76,135. நேற்று செவ்வாய்க்கிழமை 8,168 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 3,41,46,931.
நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 87,562 ஆக அதிகரித்துள்ளது.
இதையுடம் படிக்க | வருமான வரித்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிப்பது எப்படி?
நாடு முழுவதும் இதுவரை 65,88,47,816 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,84,883 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 1,34,61,14,483 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இன்றைய கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை மேற்குறிப்பிட்ட தகவல்களை வெளியிட்டுள்ளது.