2024-ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக நாடு முழுவதும் தோல்வியடைவதை காண வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் தனது விளையாட்டைத் தொடங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், பாஜக அரசு அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுறுவதை காண வேண்டும். அதற்கான பணிகளை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.