
கடந்த 1971ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றிபெற்றது. இதையடுத்து, கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசம், சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வங்கதேசம் சுதந்திரம் பெற்று இன்றோடு 50 ஆண்டுகள் ஆகின்றன.
பாகிஸ்தானுக்கு எதிராக பெற்ற வெற்றியை விஜய் திவாஸ் என்ற பெயரில் மத்திய அரசு கொண்டாடிவருகிறது. போர் நடைபெற்றபோது, பிரதமராக இருந்த இந்திரா காந்தி குறித்து இந்த நிகழ்ச்சியில் எந்த குறிப்பிம் இடம்பெறவில்லை என்றும் அவர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் கடுமையான விமரிசனம் மேற்கொண்ட ராகுல் காந்தி, "நாட்டுக்காக 32 தோட்டாக்களை தாங்கியவர் இந்திரா காந்தி(1984ஆம் ஆண்டு, இந்தியா காந்தி சுட்டு கொல்லப்பட்டார். ஆனால், அரசு நிகழ்ச்சியில் அவரின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் தேசத்துக்காக எந்த தியாகமும் செய்யாத குடும்பங்களால் இதை உணர முடியாது" என்றார்.
Our first and only woman Prime Minister, Indira Gandhi is being left out of the misogynist BJP government’s Vijay Diwas celebrations. This, on the 50th anniversary of the day that she led India to victory and liberated Bangladesh...1/2 pic.twitter.com/Ymlm57Ji7e
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) December 16, 2021
இதுகுறித்து பிரியங்கா காந்தி ட்விட்டர் பக்கத்தில், "நமது முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் இந்திரா காந்தி, பெண் விரோத பாஜக அரசின் விஜய் திவாஸ் கொண்டாட்டங்களில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளார். இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று வங்கதேசத்தை விடுவித்த 50ஆவது ஆண்டு நினைவு நாளில் இது நடைபெற்றுள்ளது.
நரேந்திர மோடி அவர்களே, பெண்கள் உங்களின் அடாவடித்தனங்களை நம்புவதில்லை. உங்கள் ஆதரவான அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது. பெண்களுக்கான உரிமையை நீங்கள் வழங்கத் தொடங்க வேண்டிய நேரம் இது" என பதிவிட்டுள்ளார்.