நாட்டில் இதுவரை மொத்தம் 137 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.
சனிக்கிழமை மட்டும் மாலை 7 மணி நிலவரப்படி 69 லட்சம் (69,21,097) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இரவு வரை செலுத்தப்படவுள்ள தடுப்பூசிகளின் இறுதி அறிக்கைகளைக் கணக்கிடும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 137,37,66,189 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது.