மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்தால் பள்ளிகள் மீண்டும் மூடப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தற்போது வெளிநாடு செல்லாதவர்களுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் மட்டும் 54 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதையும் படிக்க | நாட்டில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 213ஆக உயர்வு
இந்நிலையில், மகாராஷ்டிர அமைச்சர் வர்ஷா பேசுகையில், “ஒமைக்ரான் பரவலை கண்காணித்து வருகிறோம். தொடர்ந்து அதிகரித்தால் பள்ளிகள் மூடப்படும் என்றார்”.
இதையும் படிக்க | மீண்டும் இரவு நேர ஊரடங்கு: மத்திய அரசு உத்தரவு
ஏற்கனவே நாடு முழுவதும் கண்காணிப்பு, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.