மகாராஷ்டிரத்தில் புதிதாக 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க | அசாம் மாநிலத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்
புதிதாக 1,485 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 796 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஒமைக்ரான்:
புதிதாக 2 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஔரங்காபாத் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதைத் தொடர்ந்து, ஒமைக்ரான் தொற்றால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது.