ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் இருவேறு இடங்களில் நடந்த என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீரில் இருவேறு இடங்களில் நடந்த என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 
ஜம்மு-காஷ்மீர், ஷோபியான் மாவட்டத்தில் உள்ள பந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே இன்று கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் லக்‌ஷர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

அத்துடன் பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 
இதையடுத்து அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் இருவேறு இடங்களில் நடந்த என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com