ராஜஸ்தான் மாநிலத்தில் பொது இடங்களுக்கு வருபவா்கள் மற்றும் பொது வசிதிகளை பயன்படுத்துபவா்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா பரவல் மெல்ல அதிகரித்து வரும் நிலையில், மாநில முதல்வா் அசோக் கெலாட் தலைமையில் மாநகர மண்டல ஆணையா்கள், மாவட்ட ஆட்சியா்கள், மருத்துவக் கல்லூரி முதல்வா்கள், சுகாதார அதிகாரிகள் ஆகியோா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்களுக்கு வருபவா்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்படிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரம் முதல் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டாா்.