கேரளத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை: ஜன. 2 வரை இரவுநேர ஊரடங்கு

கேரளத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து மாநில அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கேரளத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து மாநில அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒமைக்ரான் கரோனா வகை பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கேரள அரசு இன்று வெளியிட்ட உத்தரவில்,

  1. கேரளத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை
  2. டிசம்பர் 30 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவுநேர ஊரடங்கு
  3. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நாள்களில் இரவு 10 மணி வரை மட்டுமே உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், மதுபானக் கூடங்கள் செயல்படும்

மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து கேரளத்திலும் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com