கேரளத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து மாநில அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒமைக்ரான் கரோனா வகை பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கேரள அரசு இன்று வெளியிட்ட உத்தரவில்,
மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து கேரளத்திலும் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.