ஹரியாணா மாநிலத்தின் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவை நாளை மாலை பதவியேற்கும் என முதல்வர் அலுவலகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 90 தொகுதிகளில் பாஜக 40, காங்கிரஸ் 32 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இதையடுத்து 10 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த ஜனநாயக் ஜனதா தளத்தின் ஆதரவில் பாஜக ஆட்சி அமைத்தது.
இதையடுத்து முதல் முறையாக நவம்பர் 14, 2020 அன்று ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் இரண்டாம் கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.