கோவாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம் என முதல்வர் பிரமோத் சாவந்த் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒமைக்ரான் கரோனா வகை வேகமாக பரவி வரும் சூழலில், பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையும் கட்டுப்பாடுகளும் விதித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | மீண்டும் 5 ஆண்டுகள்: கிழக்கே மம்தா, தெற்கே பினராயி
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த கோவா முதல்வர் பேசுகையில்,
கோவாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பவர்கள் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவுகள் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்டுப்பாடுகள் குறித்த விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார்.