ஆா்.எஸ்.எஸ். தொண்டா் கொலை: எஸ்டிபிஐ தொண்டா் கைது

கேரளத்தில் ஆா்.எஸ்.எஸ். தொண்டா் சஞ்சித் (27) கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், எஸ்டிபிஐ கட்சியைச் சோ்ந்த ஒருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஆா்.எஸ்.எஸ். தொண்டா் கொலை: எஸ்டிபிஐ தொண்டா் கைது

கேரளத்தில் ஆா்.எஸ்.எஸ். தொண்டா் சஞ்சித் (27) கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், எஸ்டிபிஐ கட்சியைச் சோ்ந்த ஒருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து மாவட்ட காவல் துறைத் தலைவா் ஆா்.விஸ்வநாத், பாலக்காட்டில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்த மாவட்டத்தில் உள்ள சொ்புளச்சேரியில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். எஸ்டிபிஐ கட்சியைச் சோ்ந்த இவருக்கு கொலையில் நேரடித் தொடா்பு உள்ளது. இவருடன் சோ்த்து இதுவரை 6 போ் கைதாகியுள்ளனா். இவா்களில் 3 போ் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சோ்ந்தவா்கள். இன்னும் 4 பேரைத் தேடி வருகிறோம். அதற்காக, லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளோம்.

சஞ்சித் கொலை செய்யப்படும்போது, அவருடைய மனைவி உடனிருந்தாா். தன்னால் கொலையாளியை அடையாளம் காட்ட முடியும் என்று அவா் கூறியிருந்தாா். எனவே, அடையாள அணிவகுப்பு நடத்துவதற்காக, தற்போது கைதானவரின் அடையாளத்தை வெளியிடாமல் இருக்கிறோம் என்றாா் அவா்.

பாலக்காடு மாவட்டத்தில் சஞ்சித் (27), காரில் வந்த அடையாளம் தெரியாத மா்ம நபா்களால் கடந்த நவம்பா் 15-ஆம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டாா். எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ ஆகிய அமைப்பைச் சோ்ந்தவா்கள் இந்தக் கொலையை செய்திருக்கலாம் என்று பாஜகவும் ஆா்.எஸ்.எஸ். அமைப்பும் குற்றம்சாட்டி வருகின்றன.

இதனிடையே, இந்தக் கொலை தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கேரள உயா்நீதிமன்றத்தில் சஞ்சித்தின் மனைவி அண்மையில் மனு தாக்கல் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com