கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தொற்று பரவலைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | அமெரிக்காவின் கொலராடோவில் காட்டுத்தீ பாதிப்பு
தில்லி, மகாராஷ்டிரம், கர்நாடகம், கோவா, கேரளம், குஜராத், ஒடிசா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தலைநகர் தில்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேரப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பொதுஇடங்களில் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையிலும், கர்நாடகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலும், குஜராத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரையிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.