பழம்பெரும் மலையாள நடிகர் ஜி.கே. பிள்ளை முதுமை காரணமாக திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை காலமானார்.
அவருக்கு வயது 97. இடாவாவில் பிறந்த இவர் 1954ஆம் ஆண்டு சிநேகசீமா படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். ஜி.கே. பிள்ளை ராணுவத்தில் 12 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்தியுள்ளார்.
இதுவரை 325க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். ஜி.கே. பிள்ளை மறைவுக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.