மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் பிவாண்டியின் மங்கோலியின் ஹரிஹார் வளாகத்தில் திங்கள்கிழமை கிடங்கு கட்டடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
ஒரு அடுக்கு கட்டடம் உள்ள கிடங்கில் இன்று காலை 10.30 மணியளவில் வழக்கம்போல் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் திடீரென கிடங்கு கட்டடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் சிக்கியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்தை அடைந்தனர். தேசிய பேரிடர் படையின் குழு மற்றும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தை அடைந்தனர்.
மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.