தாணேவில் கிடங்கு இடிந்து விழுந்து விபத்து: 7 பேர் சிக்கினர்

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் பிவாண்டியின் மங்கோலியின் ஹரிஹார் வளாகத்தில் திங்கள்கிழமை கிடங்கு கட்டடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. 
7 feared trapped as godown collapses in Thane district
7 feared trapped as godown collapses in Thane district

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் பிவாண்டியின் மங்கோலியின் ஹரிஹார் வளாகத்தில் திங்கள்கிழமை கிடங்கு கட்டடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. 

ஒரு அடுக்கு கட்டடம் உள்ள கிடங்கில் இன்று காலை 10.30 மணியளவில் வழக்கம்போல் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் திடீரென கிடங்கு கட்டடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் சிக்கியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்தை அடைந்தனர். தேசிய பேரிடர் படையின் குழு மற்றும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தை அடைந்தனர். 

மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com