மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு பலன் தரும் வகையில் உள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விமரிசித்துள்ளார்.
2021-22 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
இதுபற்றி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு பலன் தரும் வகையில் நிதிநிலை அறிக்கை உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை பணவீக்கத்தில் அதிகரிப்பை உண்டாக்கும். சாதாரண மக்களுக்கு அது சுமையைக் கொடுக்கும்."
நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: இங்கே க்ளிக் செய்யவும்..