நாடாளுமன்றத்தில் 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
திங்கள்கிழமை காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார்.
2021-22 நிதிநிலை அறிக்கை குறித்து இம்மாத தொடக்கத்தில் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன், முன்னெப்போதும் இல்லாத வகையில் நிதிநிலை அறிக்கை இருக்கும்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.