பட்ஜெட் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்!

வாரத்தின் தொடக்க நாளான இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வுடன் வணிகத்தை தொடங்கியுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வாரத்தின் தொடக்க நாளான இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வுடன் வணிகத்தை தொடங்கியுள்ளன. மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுவதை  அடுத்து, பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. 

இன்று காலை 10.30 மணியளவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 443 புள்ளிகள் உயர்ந்து 46,728ல் வர்த்தகமானது. 

அதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 114 புள்ளிகள் உயர்ந்து 13,749ல் வர்த்தகமானது. 

நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com