திருப்பதி விவசாயக் கல்லூரி வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது.
திருப்பதியில் சேஷாசல மலை அடிவாரத்தை ஒட்டி விவசாய பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு இரவு வேளைகளில் சிறுத்தை நடமாடுவது கண்காணிப்பு கேமராக்களிலும், இரவு பல்கலைக்கழக வளாகத்தில் பணிபுரிந்து வரும் காவல்காரா்கள் கண்ணிலும் தென்பட்டுள்ளது. மேலும் விவசாய கல்லூரி வளாகத்தில் சிறுத்தை கால் தடமும் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஒரு சிறுத்தை மற்றும் 2 குட்டிகளின் கால் தடங்கள் உள்ளதாக அப்பகுதியை ஆய்வு செய்த வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். விரைவில் சிறுத்தையை கூண்டு அமைத்து பிடிக்க அவா்கள் முயன்று வருகின்றனா்.
திருப்பதி அலிபிரியில் உள்ள உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள பகுதியில் சிறுத்தை அதிக அளவில் நடமாடியுள்ளது. அதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் நடமாடி வருகின்றனா்.