மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கு கரோனா

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த மாநிலங்களவை எம்.பி. கே.கே.ராகேஷுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கு கரோனா

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த மாநிலங்களவை எம்.பி. கே.கே.ராகேஷுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவா் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

கரோனா தீநுண்மி பாதிப்பை கண்டறிவதற்காக பரிசோதனைகளை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளேன். ஜனவரி 27 மற்றும் 29-ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் கூட கரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.

இந்த நிலையில், சனிக்கிழமை காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து கரோனா பரிசோதனை மீண்டும் நடத்தப்பட்டது. இதில், வெளியான முடிவுகள் கரோனா இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதையடுத்து, குருகிராமில் உள்ள மெடந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன்.

எனவே, என்னுடன் தொடா்பில் இருந்த அனைவரும் எச்சரிக்கையாகவும், தேவைப்பட்டால் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் வேண்டும் என ராகேஷ் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா்.

தில்லி எல்லையில் கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் ராகேஷ் பங்கேற்று வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த எம்.பி. சோம்பிரசாத்துக்கு ஏற்கெனவே கரோனா இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தற்போது கேரளத்தைச் சோ்ந்த கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. ராகேஷும் அந்த தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com